அம்மா நமக்காகவே வாழ்கிறாள், மாமியார் நம் கணவன் மார்களைக்குகாகவே அவர்கள் நலனுக்காக பிராத்திது கொண்டு சதா அவர்கள் நினைவாகவே இருக்கிறாள்.
இவர்கள் இருவருமே தனக்கென எதுவும் வாங்கிக் கொள்வதில்லை நம்மிடம் கேட்பதும் கிடையாது இது வேண்டும் அது வேண்டும் என்று.
கிழவி தானே வயதாகி விட்டது என்று நினைக்க வேண்டாம்.
அவர்களுக்கு தேவையான வெளியில் செல்லும் போது கைக்கு அடக்கமான, தோலை அறுக்காத கை பை,செருப்பு, கண்ணாடி உடைந்து இருந்தால் கண்ணாடி, மழை என்றால் சிறிய குடை.இது போல சின்ன சின்ன அயிட்டங்கள் இருக்கா இல்லையா என்று பார்த்து வாங்கி கொடுங்கள்.
உள்ளாடைகள் அவர்கள் யாரிடமும் வாங்கி கேட்பதில்லை, கேடை என்றால் நல்ல தகுந்த காட்டன் உடைகள், குளிர் காலத்தில் தேவையானவை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி கொடுங்கள்.பணம் கொடுத்தால் அவர்களுக்கென்று எதுவும் வாங்கி கொள்வதில்லை.
சேலை வாங்கி கொடுக்கும் போது ரொட்டி மாதிரி அடர்த்தியான சேலை வாங்கி கொடுக்காமல் லேசானா அதே நேரம் மெல்லியதாக இல்லாமல் பார்த்து வாங்கி கொடுக்கவும்.
என்ன தான் அப்பாவிற்கு கை நிறைய வீட்டு செலவிற்கு பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக பணம் கொடுங்கள். அவர்கள் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.
2 comments:
நல்ல பதிவு,ஆமாம், உள்ளாடைகளை கேட்பதில்லை.நாமே வாங்கி கொடுக்க வேண்டும். அவ்வொப்பொழுது பரிசாக அவர்களுக்கு தேவையானவைகளை கொடுக்க ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும்.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி அமுதா
ஆமாம் சரியாக சொன்னீர்கள் சில மாமியார்கள் எதுக்கு வீண் செலவு என்று எதுவுமே கேட்பதில்லை.நாம் பார்த்து வாங்கி கொடுக்கலாம்.
Post a Comment