Sunday, January 17, 2010

கோபம் தன்னையே அழித்து விடும்






"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்...



கோபம் ஏன் ஏற்படுகின்றது?



கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.·







நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது... ·








நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது... · எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன.










ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.









கோபம் தன்னையே அழித்து விடும்மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும்.


ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும்.


இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.




கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன.




நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்) ·




திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும். ·




தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது. ·



மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும். ·




முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள.












55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.




கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும். ·












இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். ·




மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.



கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:







கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான்.


இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.










கோபத்தை குறைக்க சில வழிகள்:




1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.




2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.



3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்



4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.



5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.


6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்


7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்












உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)






மேலே உள்ளது மெயிலில் வந்த தகவல்










இது என் டிப்ஸ்க‌ள்.






கோபமா இருந்தால் கொஞ்சம் நிதானம் வேண்டும்.


கோப‌ம் ரொம்ப‌ அதிக‌மானால் ஒரு வாழைப‌ழம் சாப்பிடுங்க‌ள்.

சில‌ர் கேலி கிண்ட‌ல் செய்யும் போது தான் கோப‌ம் அதிக‌மாகும் நான் என் பைய‌ன்க‌ளிட‌ம் யாராவாது உன்னை கேலி கிண்ட‌ல் செய்தால் அவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளையே சொல்லி கொள்கிறார்க‌ள் என்று நினைத்து கொள்ளுங்க‌ள் என்பேன்.


அய்யோ அவர் ரொம்ப கோபக்காரர் பா .. ஏதாவது சொன்னால் அவருக்கு மூக்குக்கு மேலே கோபம் வரும் என்பார்கள்.


அது நாமா ஒருவரை பற்றி சொல்லி உசுப்பேத்திவிடுவதால் தான் கோபப்படுபவர்களுக்கு இன்னும் தலை கருவம் அதிகமாகுது.

கோபப்படுபவர்கள், மிகவும் வயதான தோற்றமாக இருப்பார்கள்.
இளமையை தக்கவைக்க கோபத்தை குறைப்பது நல்லது.
கோபத்தை குறைப்பதால் பல வியாதிகளிலில் இருந்து விடுதலை பெறலாம்.
பெண்களுக்கு கோபம் வந்தால் இதை கிளிக் செய்து படித்து கொள்ளலாம்.
பிள்ளைகளுக்கு கோபம் வந்தால்இதை கிளிக் செய்து படித்து கொள்ளலாம்.

கோபம் சொந்த பந்தங்களை இழக்க செய்யும், கோபம் நல்ல சகவாசத்தை இழக்க செய்யும்.

வாழ்க்கை இனிமையானது, அதை ரசித்து வாழ பழகி கொள்ளுங்கள். ஓவ்வொரு நாளும் பொன்னானது அது போனால் திரும்பி வராது.

11 comments:

S.A. நவாஸுதீன் said...

மெயிலில் வந்தாலும் இடுகையிட்டு நல்ல தகவல்களை பகிர்ந்துகொண்டதற்கு சந்தோசம், நன்றியும்.

S.A. நவாஸுதீன் said...

வாழைப்பழம் சாப்பிட்டா கோபம் குறையுமா!! நல்லதாப் போச்சு.

malar said...

உங்கள் பதிவு ரொம்ப அருமை .

கோபத்தை அடக்குவது என்பது ரொம்ப இயலாத காரியம் .நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் நம்மை கோபம் அடைய செய்கிறது.

Jaleela Kamal said...

ஆமாம் நவாஸ் வாழை பழம் சாப்பிட்டாலும் கோபம் தனியும் என்று சொல்வார்கள்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மலர், நிறைய பெண்கள் இப்படி தான் சட்டுன்னு கோபப்படுவதால், பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.


கொஞ்சம் கொஞ்சம் மாக நல்ல ரசித்து சிரிச்ச சம்பவத்தை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.கோபம் வரும் போது அதை நினைத்து கொள்ளுங்கள்.


கண்டிப்பாக சுற்றி இருப்பவர்கள் என்ன கோபமூட்டினாலும் அது உங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியாது.

தாஜ் said...

சலாம் ஜலீலா
நலமா?பிள்ளைகள் நலமா?

நபி[சல்]அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ” (மிஷ்காத்)

அருமையான தகவலை தந்த ஜலீலாவுக்கு நன்றி

Jaleela Kamal said...

தாஜ் சலாம் அருமையான விளக்கம் கொடுத்து இருக்கீங்க நன்றி.

பிள்ளைகள் நலம்

athira said...

ஜலீலாக்கா மிக நல்ல தகவல். எல்லோருக்குமே தேவையான தகவல். ஒரு கருத்தை மட்டும் தவறவிட்டுவிட்டீங்கள் ஜலீலாக்கா.... கோபம் வந்தவுடன், போர்த்துக்கொண்டு குப்புறப்படுத்திட வேண்டும்... இது பூஸின் அறிவுரை:).

எல்லோரும் தெரிந்துகொண்டுதானே கோபிக்கிறார்கள், இனிமேலாவது தெரியாமல் கோபிக்கப்பாருங்கோ.. இது பூஸின் அறிவுரை நம்பர் ரூ.

நல்ல நல்ல தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கிறீங்கள் ஜலீலாக்கா தொடருங்கோ.

Jaleela Kamal said...

ஒரு கருத்தை மட்டும் தவறவிட்டுவிட்டீங்கள் ஜலீலாக்கா.... கோபம் வந்தவுடன், போர்த்துக்கொண்டு குப்புறப்படுத்திட வேண்டும்... இது பூஸின் அறிவுரை:).

அட அதிராவின் பூஸின் அறிவுரை ரொம்ப ஜோரா இருக்கே.

தொட‌ர்ந்து வாங்கோ அதிரா

SUFFIX said...

பயனுள்ள‌ பகிர்வு சகோதரி.

prabhadamu said...

ஜலீலாக்கா மிக நல்ல தகவல். எல்லோருக்குமே தேவையான தகவல். வாழ்த்துக்கள் அக்கா....