
லைனிங் வைத்து தைத்து உள்ள துணிகளை துவைத்து காயப்போடும் போது உள்பக்கமாக அதாவது லைனிங் பக்கமாக காயபோடவேண்டும்.மேல் பக்கம் காய போட்டால் உள்ளே உள்ள லைனிங் துணி சுருங்கி நிற்கும். அயர்ன் செய்யும் போது ரொம்ப சிரமமாக இருக்கும்.
புதுசா டிரெஸ் எடுத்தால் எல்லா துணிகளோடும் போட கூடாது சில சமயம் டார்க் கலர் டிரெஸ் சாயம் போகும், தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது.
சில பேர் நிறைய சோப் போட்டு பிரெஷ் போடுவார்கள் ஆனால் சரியா அலசமாட்டார்கள். சோப்பை நன்கு குமிக்கி பிழிந்து விட்டு பிறகு வெண்ணீரில் அலசினால் கூட சீக்கிறம் சோப் நுரை விடும். முன்று தண்ணீரில் நல்ல அலசனும். அதில் சிறிது சோப் இருந்தால் கூட அலர்ஜி மற்றும் அரிப்பு வரும்.
பிசு பிசுப்பான துணிகளை துவைக்கும் போது சிறிது வெண்ணீரில் சோப் பொடி போட்டு ஊறவைத்து பிறகு துவைக்கலாம்.

டூர் செல்லும் போது ஹேங்கரும், கிளிப்ஸும் எடுத்து சென்றால் துணிகளை காயப்போடுவது சுலபம்.
வாசிங் மிசின் இல்லாமல் பெட் சீட் போன்ற கடினமான துணிகளை துவைக்கும் போது சோப்பில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு கீழே போட்டு கையால் குமிக்கி துவைப்பதற்கு பதில் நல்ல இரண்டு காலால் ஒரு ஐந்து நிமிடம் மிதிக்கலாம்.அது காலுக்கு ஒரு உடற்பயிற்சியும் ஆச்சு.இதே போல் மிதியடிகளையும் அலசலாம்.
டெய்லரிடம் லைனிங் துணி வைத்து காட்டன் டிரெஸ்களை தைக்கும் போது அதை அலசி அயர்ன் செய்து கொடுக்கவும், இல்லை என்றால் ஒரு முறை போட்டு துவைத்ததும், கருவாடு போல் சுருங்கிவிடும். அதுவும் விலை உயர்ந்த துணியாக இருந்தால் இன்னும் உங்களுக்கு மனசே ஆறாது.
காட்டன் புடவை கட்டுபவர்கள் அதற்கு பால்ஸ் வைத்து தைத்து கட்டினால் புடவை தூக்கி கொள்ளாமல் இருக்கும்.
நிறைய கர்சீப் துவைத்து காயபோடும் போது ஒவ்வொன்றிற்கா கிளிப் குத்த தேவையில்லை. எல்லாத்தையும் ஒன்றோடு ஒன்று மூலைகளை சேர்த்து முடிச்சி போட்டு காய போடலாம்.
8 comments:
ஆமாங்க .. துவச்ச அப்புறம் reverse side la அயர்ன் பண்ணா .. துணி புதுசு மாதிரி இருக்குமாம்.. என் அம்மிணி என்கிட்ட சொல்லுவா அவ புடைவைய நான் அயர்ன் பண்ணும் போது :(
//ஆமாங்க .. துவச்ச அப்புறம் reverse side la அயர்ன் பண்ணா .. துணி புதுசு மாதிரி இருக்குமாம்.. என் அம்மிணி என்கிட்ட சொல்லுவா அவ புடைவைய நான் அயர்ன் பண்ணும் போது :(//
ஹா ஹா நீங்க ரொம்ப நல்லவர் தான் போங்க,உங்கள் மனைவி ரொம்ப கொடுத்து வைத்தவங்க.... ஆமாம்
பட்டு சேலையை கூட பின்புறம் தான் அயர்ன் பண்ணனும்.
நன்றி
நல்ல பயனுள்ள குறிப்பு .பாயவும் வைத்து பார்க்கணும் இன்சா அல்லா !
குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இன்ருந்தால் கை மருந்து ,காய்ச்சல் சமயத்தில் உணவு உண்ணாமல் ரொம்ப படுத்துவார்கள் உணவிர்க்குபிறகு மருந்து என்பதால் எதை கொடுத்த பிறகு மருந்து கொடுப்பது .போன்றவர்ர்ரிக்கு பதில் சொல்லுங்கள் .
மலர்,
பிள்ளைகளுக்கு சளி , காய்ச்சல் வந்தால் ஒரு ஆறு நாட்கலுக்கு ரொம்ப படுத்ததான் செய்வார்கள்.
சளி என்றால் குங்குமபூ (சாப்ரான் ) நாலு இதழ் சூடான பாலில் கரைத்து கொடுங்கள்.
எதுவுமே இரங்காது, எல்லாம் கண் முன் வைக்கனும் ஒரு ஒரு வாய் தான் வாங்குவார்கள்.மீதி பதிவு பிற்கு போடுகிறேன், நீங்கள் குழந்தைவளர்பு பகுதியை கிளிக் செய்து பாருங்கள், உங்கலுக்கு பயனுள்ளதா இருக்கும் அப்படியும் சந்தேகம் இருந்தால் இதன் கீழே கேளுங்கள் சொல்கிறேன்.
http://kidsfood-jaleela.blogspot.com/
malar iwtha linkai paarungkaL.
http://kidsfood-jaleela.blogspot.com/
malar iwtha linkai paarungkaL.
thanx blog பாத்தேன் .நல்ல தகவல் .நான் கேட்டது 7 8 வயது பிள்ளைகளுக்கு
http://tips-jaleela.blogspot.com/2009/04/blog-post.html
itha paarungkaL, ippa time illai konjsam mudiyala piRaku pathil tharukiReen.
Post a Comment